Tuesday, May 29, 2018


21 -01-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 220
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
கத்தரிச்செடியில் பூ பூத்ததில்
சிலாகிக்கிறது என் காலை பொழுது ...
உள்ளங்கை தொட்டு தந்த விதை
முளைக்க ஆரம்பித்தது அன்றைய தோட்டம் ...
மொட்டுவிட்டிருந்த முல்லைக்கொடியுடன்
உள் நுழைவாள் ஒரு தட்டானாக அவள் ...
ஜன்னல் கம்பிக்கு வெளியே
தலைநீட்ட ஆரம்பிக்கும் பிரியம் ...
மேயாத தோட்டத்தில்
வெறுமனே கிடந்தது கம்பி வேலிகள்...
மீன் தொட்டியில் மூழ்கி கிடந்தது
செல்லுபடியான காலம்
காலணா அரையணா நாணயங்களாக ...
பூச்சி அரித்த கத்தரிச்செடியும்
ஆடு மேய்ந்த முல்லைக்கொடியுமாக
காற்றில் அசைகின்றன காதலும் இன்ன பிறவும்…..
- நாகா

No comments:

neelam enbathu song