Tuesday, May 29, 2018

05 -02-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 227
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
நிழல் உதிர்த்த புங்கை மரம்
சிதறி இருக்கும் சிறகுகள் போல தென்பட்ட போது தான்
தாத்தா ஞாபகம் வந்தார்..
பறவைகள் மீது அலாதி பிரியம் அவருக்கு ..
கூடு திரும்பும் பறவையாக
அடிக்கடி வீடு திரும்பும் என்னை
ஒரு பறவையின் கரிசனத்துடன்
அணுகுவது அவரின் இயல்பு....
சாளரம் திறக்கும் பறவையின் அலகில்
தாத்தாவின் நினைவுகள் சிறகடிக்கும் ...
ஆகாயத்தின் மறுமுனையில் நானும்
எதிர் முனையில் தாத்தாவும்
மாறிமாறி இழுக்கிறோம்
இடைவெளியில் நழுவி விழுகிறது
ஒரு தலைமுறையின் வால் நட்சத்திரம் ஒன்று...
- நாகா

No comments:

neelam enbathu song