Tuesday, May 29, 2018

15 -01-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 216
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
மருத நிலத்தில் இருந்து
மேய ஆரம்பித்தது என் ஆநிரைகள் ...
மேய்ச்சலை மறந்திருந்த பொதி சுமக்கும் வேளை
அசைபோடஆரம்பித்தது என்னை போல் அதுவும் ...
தாடி வளர்த்த ஆட்டுக்கிடாவும்
கொம்பு முளைத்த காங்கேயமும்
தொழுவங்கள் மறந்து என்னைப்போல்
திசைக்கொன்றாய் அலைமோதியது ...
மேய்ப்பனைத்தேடும் நிலங்களில்
நெய்தலை விதைத்திருந்தது கோடை ..
கரம்புக்காடாக மாறிய பொட்டலில்
முளைக்க ஆரம்பித்தது
குழலில் இருந்து விலகியிருந்த மூங்கில் ..
மூக்கணாங்கயிறு பூட்டிய நுகத்தடிகளில்
வாலால் விசிறிக்கொண்டிருந்தன
எங்கள் வீட்டு செல்ல பசுக்கள்...
-நாகா

No comments:

neelam enbathu song