Tuesday, May 29, 2018

14 -02-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 233
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒத்த பூவ தொட்டு வாங்கும்
விரலில் வழியுது காதல்
அரண்டு மிரண்டு உருளும் விழியில்
தூண்டில் போடுது காதல்...
பட்டு தெறிக்கும் மழைதுளியெங்கும்
கொட்டி போகுது காதல் ...
உள்ளங்கையில் ஏந்திக்கொண்டால்
அழகாய் மிதக்குது காதல்...
புல்லாங்குழலை தொலைத்துவிட்டு
உதட்டில் ஒளியுது காதல் ..
இதய துடிப்பின் ஓசையில் மெல்ல
இசையாய் துளிர்க்குது காதல்...
செல்ல சிணுங்கல் சின்ன பதுங்கல்
மழலை யாகுது காதல் ...
திருகாணிக்குள் தீபமேற்றி
திசையில் தொலையுது காதல்...
நட்டுவைத்த செடியை சுற்றி
வட்டம் போடுது காதல் ...
காலை சுற்றும் பூனை போல
வாலை ஆட்டுது காதல்....
அக்கறையோடு கேசம் வருடி
நேசம் பேசுது காதல் ....
மடியில் போட்டு கதைகள் சொல்லி
தூங்க வைக்குது காதல் ....
தாயாய் சேயாய் பேயாய்
யாதும் ஆகுது காதல்
சோகம் மோகம் தாகம் யாவும்
தளும்பி வழியுது காதல்...
- நாகா

No comments:

neelam enbathu song