Tuesday, May 29, 2018

18 -01-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 219
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
தரையிறங்கும் ஒரு பறவையை போல
காற்றில் மிதக்கிறேன் அவளுடன் ..
மேக கிளையில் அமர்ந்து போகும்
அந்த நதியில் நனைகிறது எங்கள் சிறகு ...
ஈரம் உலர்த்தும் கந்தர்வ நொடியில்
குளிர் காய்கிறது எங்கள் தனிமை ...
வெயில் சுமக்கும் பகலில்
ஒற்றை துளியில் ஆவியாகிறது நேசம்...
பயணங்களின் தொலைவை தீமானிக்கும்
திசைகளில் தொலைகிறோம் ஆனந்தமாக..
ஒரு செல்ல இடைவெளியில்
கொத்திக்கொன்டு பறக்கும் அவளிடமிருந்து
விடுபடாத என்காதல் இறையாகிறது
புசிக்க தன்னை இரையாய் கொடுத்த படி ....
பறவையாய் நான் மாறிக்கொண்டிருக்கிறேன்
ஆகாயமாய் அவள் வேர்விடத்தொடங்குகிறாள் ..
-நாகா

No comments:

neelam enbathu song