Tuesday, May 29, 2018

15 -02-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 234
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒற்றை புன்னகையில்
தீபம் ஏற்றி போவாள்
பிரகாசமாகும் என் வீடு ....
கூட்டி பெருக்கிய அறைக்குள்ளிருந்து
சுருட்டி கிடந்த கூந்தலில்
வந்தமர்கிறது அவள் ஞாபகம்
ஒரு பட்டாம்பூச்சியாய்
உள்நுழைய தொடங்கும் ...
சாளரம் படியும் தோட்டத்து செடியின் நிழல்
ஹைக்கூ கவிதையாய்
அவளை தேட ஆரம்பிக்கும் ...
முகம் பார்க்கும் கண்ணாடியில்
வந்து போகும் அவள் முகத்திற்கு
பொட்டு வைத்து பார்க்கிறது
முணுமுணுக்கும் பாடல் வரிகள் ....
அந்த தேவதைக்காக
ஒரு மாலை வெயிலில்
மருதாணி பறிக்கிறேன்..
விரல்கள் கோர்த்து நடந்த
சாலைகள் எங்கும்
உதிர்ந்து கிடக்கிறது நேற்றைய நினைவுகள் ..
பலூன்களில் நிரம்பிய காற்று
மூங்கிலில் நுழைந்து வெளியேறுகிறது
துளைகளின் வழியே காதல்....
- நாகா

No comments:

neelam enbathu song