Tuesday, May 29, 2018

25 -01-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 223
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
தீண்டலும் தீண்டல் நிமித்தமுமாய்
அந்த ராத்திரியில் அரங்கேறியது அது....
நிலா உமிழ்ந்த இருட்டில்
சர்பங்களின் புணர்தலை தலையசைத்து கவனித்தது
அந்த வேலியோர ஓணாய்....
அதரங்களில் வெளியேறும் ஜுவாலையில்
விளக்கேற்றிக் கொண்டது காமம்...
உடல் தின்று பசியாறும் காதலை
முதல் முறையாய் தரிசித்தது அந்த இடம்...
இமைகளில் அனல் துண்டுகள்
இடைவெளிகளில் பனித்துண்டங்கள்
மாறி மாறி சண்டையிட்டு தோற்றன...
உடல் கடத்தும் ஒரு அத்வைதம்
நனைத்து கொண்டிருந்தது அந்த துளசி செடியோரம் ...
- நாகா

No comments:

neelam enbathu song