Tuesday, May 29, 2018

22 -01-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 221
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
முக நூலில் பார்க்க முடிகிறது
பழைய நண்பர்களை சிரித்த முகங்களுடன் ...
சுயமிகளில் உறைந்த புன்னகை
தேடி எடுக்க வேண்டியிருந்தது நேரில் சந்தித்த போது ...
இருந்துவிடலாம் போலிருக்கிறது
இன்ஸ்ட்டாகிராமிலும் டுவிட்டரிலும்....
முகம் பார்த்து பேசும் தோழமைகளை
அலைபேசியில் தேடி கண்டடைகிறது நட்பு ...
நொறுங்குகிறது கண்ணாடி இதயம்
வார்த்தை கல் பட்டு நிதானமாக ..
வலைத்தளங்களில் சிக்கிக்கொள்கின்றன
துருத்திக் கொண்டு திரியும் வார்த்தைகள்...
சொல் கொண்டு வீழ்த்தும் யுத்தத்தில்
நிராயுதபாணியாக நிற்கிறது மௌனம் ...
- நாகா

No comments:

neelam enbathu song