Tuesday, May 29, 2018

31 -01-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 224
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

உடைந்த அலைபேசியில்
உடையாமல் ஒலிக்கிறது அவள் குரல் ...
வண்ணங்களில் தோய்ந்த குரல்
வானவில்லை வரைந்து போகும் சில நேரம் ...
ஒரு கலாபமாக வலம் வருகிறது
அன்பில் நனைந்த அந்த குரல் ...
குளிர்சட்டையாக தண்ணீர் பந்தலாக
மாறிவிடுகிறது ஒரு ஒற்றை பறவையாய் அந்த குரல் ...
ஊடலில் கரையும் அந்த குரலில்
மூழ்கிவிடுகிறது சோகங்கள்...
மழையின் நிழலில் மறையும் அந்த குரல்
தலைதுவட்டி போகிறது எனக்குள் ...
எனக்கான வார்த்தைகளை
சேகரிக்கும் அந்த குரல்
முதல்முறையாக தனக்காக பேசுகிறது ...
ஒலிக்கும் குரலில் ஒளிந்துகொள்கிறேன்
ஒரு கங்காருக்குட்டியைப்போல ....
- நாகா

No comments:

neelam enbathu song