Tuesday, May 29, 2018

19 -02-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 236
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
கொட்டும் மழையை
ஒரு குடை கொண்டு மறைப்பது போல்
உள்ளங்கை ஏந்தி மழைப்பிடிப்பாள்...
ஒரு நனைந்த பூனைக்குட்டியாய்
உள் நுழைவாள் நவீன ஓவியம்
தரையெங்கும் கொட்டி போகும் ..
தூரிகையின் நிழலில்
கத்தி கப்பலாகும் அவள் புன்னகை..
தோட்டம் முழுக்க பூக்களையும்
வாசல் முழுக்க தென்றலையும்
அடிக்கடி நினைவுப்படுத்துவாள்...
சிண்ட்ரெல்லாவாகும் அவளுடன்
ஒரு தட்டானாக தாழ பறந்து போகிறேன் ..
அவள் சுட்டு விரலும் கட்டை விரலும்
என்னை பிடித்துவிடும் தருணத்தில்
உயிர்பிக்கலாம் ஒரு தந்தையின்
ஆக சிறந்த குழந்தை பருவம் ...
- நாகா

No comments:

neelam enbathu song