Tuesday, May 29, 2018

21 -02-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 237
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு வட்ட மேசை மாநாட்டை
நிகழ்த்தி காட்டுகிறது
உன் அண்மை எனக்குள்...
யாரோ அழைத்த குரல்
காற்றில் மோதி திரும்ப வைக்கிறது
என்னை உன் திசை நோக்கி ...
பூவாசத்தில் தோட்டம் கண்டடையும்
என் முயற்சியின் வாலில் நூல் கட்டி
பறக்க விடுகிறது காதல் தட்டான் ...
உள்ளங்கை நிரம்பிய சோள மணிகளை
கொத்த வரும் குருவிகளாகிறது உன் புன்னகை ...
திடுக்கிட்டெழும் இரவு பொழுதின்
சுருண்ட படுக்கையை போல
சிதறி கிடந்தது உன் நித்திரை ...
உன்னுடனான என் தனிமையில்
கல்லெறிந்து போகும் குளமாகிறது
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் ஆகாயம்...
- நாகா

No comments:

neelam enbathu song