02 -01-2018
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 207
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 207
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஆண் சூரியன் பெண் நிலவு
சுழலும் பூமி சொல்லிச்செல்கிறது ..
ஆணாகிற போது கதிரில் ஒளிகிறது நிலவு
பெண்ணாகிற போது இரவில் அலைகிறது பகல் ...
பௌர்ணமி அலைகளில்
பட்டுத் தெறிக்கலாம் சூரிய கிரணங்கள் ..
ஆண் விரல்களில் பெண் நகங்கள்
பெண் புன்னகையில் ஆண் கம்பீரம்...
மானை வீழ்த்தும் புலி
சிங்கம் விரட்டும் முயல்
வனம் முழுதும் காய்கிறது நிலாசூரியன் ..
சூரிய பிறைகளை சந்திரன் ஏந்திக்கொள்ள
நிலவு கிரணங்களில் சோம்பல் முறிக்கிறது காதல்...
எனக்குள் இருக்கும் அவளை
அவளுக்குள் இருக்கும் என்னை
கண்டுபிடிக்கும் தருணங்களில்
அரத்தநாரீஸ்வரமாகிறது காமம் ....
சுழலும் பூமி சொல்லிச்செல்கிறது ..
ஆணாகிற போது கதிரில் ஒளிகிறது நிலவு
பெண்ணாகிற போது இரவில் அலைகிறது பகல் ...
பௌர்ணமி அலைகளில்
பட்டுத் தெறிக்கலாம் சூரிய கிரணங்கள் ..
ஆண் விரல்களில் பெண் நகங்கள்
பெண் புன்னகையில் ஆண் கம்பீரம்...
மானை வீழ்த்தும் புலி
சிங்கம் விரட்டும் முயல்
வனம் முழுதும் காய்கிறது நிலாசூரியன் ..
சூரிய பிறைகளை சந்திரன் ஏந்திக்கொள்ள
நிலவு கிரணங்களில் சோம்பல் முறிக்கிறது காதல்...
எனக்குள் இருக்கும் அவளை
அவளுக்குள் இருக்கும் என்னை
கண்டுபிடிக்கும் தருணங்களில்
அரத்தநாரீஸ்வரமாகிறது காமம் ....
- நாகா
No comments:
Post a Comment