Monday, July 30, 2018

02-10-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை :151 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

02-10-2017
திங்கள் 

ஒற்றையடிப்பாதை :151

தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

ஒரு வழிப்போக்கனை துணையாக
அழைத்துச்செல்கிறது இந்த கவிதை ...
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்
தனிமையின் நிழலை பூசிக்கொண்டு
திரியும் ஒரு நிலவை போல
அதன் எல்லைகள் நீண்டுகொண்டே செல்கிறது...
சுவடுகளை தேடி பின்தொடர
யாருமற்ற பொழுதுகளில்
எழுத ஆரம்பிக்கிறது தன்னை பற்றிய குறிப்புகளை ..
வெயில்நிலங்களையும் மழை பூமிகளையும்
கடந்து கடந்து போகிறது
அதன் பனிக்கால ராத்திரிகள்...
இலையுதிர் காலத்தின் புகலிடங்களை
தேடி அலையும் மலைப்பாம்பென
அதன் இரைதேடும் அவசரம்
வெளிப்படுகிறது கவிதையின் வார்த்தைகளில் ...
ஒரு வெளியில் தொடங்கி மறுவெளியில்
முடிந்துவிடும் உங்கள் வாசிப்பை போல
ஒரு பாதசாரியின் பயணமாய்
கனகச்சிதமாய் கடந்து போகிறது .....
தொலைவுகளில் தொலையும் குழந்தையாய்
இறக்கிவிட்ட பழக்கப்படாத இடத்தில்
மறுபடியும் உங்களை தேடவைத்தபடி….

- நாகா

No automatic alt text available.

No comments:

neelam enbathu song