Thursday, July 26, 2018

29-10-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை :167 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

29-10-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை :167
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
பூவரசம் இலையில் நுழைந்து
வெளியேறும் காற்றில்
நிரம்பி வழிகிறது இசை
மேய்ச்சலில் தொலைந்த ஆட்டுக்குட்டியாய்
கேட்கவேண்டி இருக்கிறது ஒவ்வொருமுறையும் ..
மழையேந்தும் உள்ளங்கையில்
சில்லென்று படரும் சிறுவெயில் போல
அனிச்சையாகிறது அதன் தனிமை ...
கொட்டிச்சென்ற அதன் இருப்பில்
தொட்டுச்செல்கிறது உச்சியின் நிழல்..
கை நிறைய அள்ளி வீசிவிட்டு போகும்
வண்ணக்கலவையில் நிறமிழக்கிறது வானம் ...
ஆலோசனைகளை பூசணிக்கொடியாக்கும்
நிலமெங்கும் மறைகிறது அதன் உருவம் ...
தொட்டிகளில் பதியனிட்ட விதைகளில்
முளைக்க ஆரம்பிக்கிறது கேள்விகள் ...
கேரியரில் அமர்ந்த பொதிபோல
நகர மறுக்கும் மிதிவண்டியாகிறது அதன் யோசனைகள்..
யாரும் உணராத பொழுதில்
கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது
பூமராங் வார்த்தைகளை வீசிட்டு போகும்
யாரோ ஒருவரின்
அதிமேதாவித்தனமான வார்த்தைகள்....
-நாகா

No comments:

neelam enbathu song