30-10-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை :168
திங்கள்
ஒற்றையடிப்பாதை :168
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
கொஞ்சம் ஜன்னல் திறந்து வையுங்கள்
உங்கள் அனுமதிக்காக என்னைப்போல்
காத்திருக்காது என் கவிதை ...
சட்டென்று நனைக்க ஆரம்பிக்கும் மழைபோல
சில்லிட வைக்கலாம் உங்களை ...
சமரசம் செய்துகொள்ள பழகிய எதுவும்
கைவசம் இல்லாத பொழுதில் உங்களை
வாசிக்கவைத்தில் அதன் அடாவடித்தனத்தை
நீங்கள் உணர முற்படலாம்…
மெல்ல உங்களில் தன் வேர்களை
இறக்கி செல்லும் அதன் வனத்திற்குள்
உங்களை கூட்டிபோகும் ஒரு குழந்தையாக ...
ஒரு மின்மினியாகி உங்கள் பாதையில்
அரிக்கேனாகும் அதன் அடையாளம் ...
ஒரு வித்தியாசம் நான் உங்களால் நேசிக்கப்படுகிறேன்
என் கவிதையால் நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள்...
உங்கள் அனுமதிக்காக என்னைப்போல்
காத்திருக்காது என் கவிதை ...
சட்டென்று நனைக்க ஆரம்பிக்கும் மழைபோல
சில்லிட வைக்கலாம் உங்களை ...
சமரசம் செய்துகொள்ள பழகிய எதுவும்
கைவசம் இல்லாத பொழுதில் உங்களை
வாசிக்கவைத்தில் அதன் அடாவடித்தனத்தை
நீங்கள் உணர முற்படலாம்…
மெல்ல உங்களில் தன் வேர்களை
இறக்கி செல்லும் அதன் வனத்திற்குள்
உங்களை கூட்டிபோகும் ஒரு குழந்தையாக ...
ஒரு மின்மினியாகி உங்கள் பாதையில்
அரிக்கேனாகும் அதன் அடையாளம் ...
ஒரு வித்தியாசம் நான் உங்களால் நேசிக்கப்படுகிறேன்
என் கவிதையால் நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள்...
-நாகா
No comments:
Post a Comment