27 -12-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 204
புதன்
ஒற்றையடிப்பாதை : 204
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
சித்தார்தனை தேடி வெகுநாளாக
ஒரு புத்தனை போல் அலைந்து கொண்டிருக்கிறேன் நான் ...
முழுமை அடைந்த வாழ்வின் திகம்பரம்
எனக்குள் போதிமரங்களை பதியனிடுகிறது....
விடைகளுக்கு கேள்விகள் தயாரிக்கும்
அதன் நிழலில் கூடுகட்ட ஆரம்பிக்கிறது ஆசையின் சிலந்தி ..
யசோதாவின் கண்ணீரில் மிதக்கும் கௌதமனை போல
வீடு அடைதல் நிகழ்கிறது எனக்கு ..
வலசை திரும்பும் பறவையாகிற ஞானம்
விட்டு விடுதலையாகிறது அவ்வப்போது...
அவனை எப்போதும் அவனாக விடாத
அவதானிப்பில் தான் அவதரிக்கிறான்
இன்னொரு புத்தன் என்னிடம் இருந்து ...
ஒரு புத்தனை போல் அலைந்து கொண்டிருக்கிறேன் நான் ...
முழுமை அடைந்த வாழ்வின் திகம்பரம்
எனக்குள் போதிமரங்களை பதியனிடுகிறது....
விடைகளுக்கு கேள்விகள் தயாரிக்கும்
அதன் நிழலில் கூடுகட்ட ஆரம்பிக்கிறது ஆசையின் சிலந்தி ..
யசோதாவின் கண்ணீரில் மிதக்கும் கௌதமனை போல
வீடு அடைதல் நிகழ்கிறது எனக்கு ..
வலசை திரும்பும் பறவையாகிற ஞானம்
விட்டு விடுதலையாகிறது அவ்வப்போது...
அவனை எப்போதும் அவனாக விடாத
அவதானிப்பில் தான் அவதரிக்கிறான்
இன்னொரு புத்தன் என்னிடம் இருந்து ...
- நாகா
No comments:
Post a Comment