Wednesday, July 25, 2018

07 -01-2018 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 210 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


07 -01-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 210
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அப்போதெல்லாம் அப்பா கடிதம் எழுதுவார்
அன்புள்ள தொடங்கி இப்படிக்கு முடியும்
அவரின் எல்லா கடிதத்திலும்
குத்தகைக்கு போன நிலமும்
வட்டிக்கட்ட முடியாமல் மூழ்கிப்போன
அம்மாவின் ஒரு ஜோடி வளையலும்
பெரும்பாலும் வந்துபோகும்...
அவரின் இயலாமை சில நேரம் விரக்தியாகவும்
பலநேரம் துக்கமாகவும் தென்படுகையில்
தொலைபேசியில் அழைப்பதுண்டு
இன்னொருவர் வீட்டில் நின்று பேசுவதில்
ஆர்வம் காட்டாத அப்பா கடைசிவரை
மற்றவரை மாற்றவோ தன்னை மாற்றிக்கொள்ளவோ
பிரியம் காட்டாமலே இருந்திருக்கிறார்.
வரும்போது வா பரவாயில்லை
ஊருக்கெல்லாம் சொல்லியாகிவிட்டது
அம்மாவின் அலைபேசி அழைப்பு வந்த போதுதான்
அப்பா ஒரு முகவரி தவறிய கடிதமாய் மாறிவிட்டார்
என்பது புரிய ஆரம்பித்தது ...
இனி அம்மாவிடமிருந்து வார்த்தைகள் வரலாம்
அப்பாவின் பேச்சிற்கு உயிர்கொடுத்தபடி...
- நாகா

No comments:

neelam enbathu song