Thursday, July 26, 2018

25-10-2017 புதன் ஒற்றையடிப்பாதை :165 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


25-10-2017
புதன்
ஒற்றையடிப்பாதை :165
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

பூச்சாண்டிகளை துரத்த ஆரம்பிக்கிறது
பூச்சாண்டியாய் மாறிய இந்த கவிதை ..
சிதறிய பருக்கைகளில் அம்மாவின் நேசம்
காலிபாத்திரத்தில் நிரம்பி வழியும் ...
அழுகை எழுதிய கிண்ணங்களில்
பாதியாய் வந்து ஒளிகிறது நிலா...
கொடுத்துவிடுவதாய் சொல்லியபிறகும்
தூக்கிப்போகாத பிரியம் பூனையாய் மெல்ல பதுங்கும் ...
இடுப்பில் அமர்ந்த படி தூங்கிபோகின்றன
குழந்தைகள் பூச்சாண்டிகளின் பயத்தில் ...
அழகான பூச்சாண்டிகளை சொப்பனத்தில் கண்டு
கண்விழிக்கின்றன ராத்திரிகள் ...
முகமூடிகளை தொலைத்த பூச்சாண்டிகளை
விண்மீன்களில் தேட ஆரம்பிக்கறது
முதல் முறையாக அழ ஆரம்பிக்கும் குழந்தை ...
பூச்சாண்டிகளுடன் விளையாடும் குழந்தைகள்
உங்களை போல பாக்கியாயசாலிகள் ...
-நாகா

No comments:

neelam enbathu song