Thursday, July 26, 2018

23-10-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை :163 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

23-10-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை :163
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
தீர்ந்து போயிருந்த முத்தங்களிலிருந்து
உதடுகளால் அந்த தேவதையை
வரைய ஆரம்பிக்கிறது இந்த கவிதை ..
முத்தங்களில் நனைந்திருந்த தூரிகை
தீட்டிச்சென்ற இடங்களில் மென்விரல்களால்
பதியனிட பூக்களானது வியர்வை ...
எட்டாவது நிறத்தில் உண்டான இடைவெளியில்
தன்னை ஊற்றி நிரப்ப ஆரம்பித்தது காதல்...
செலவழித்த கனவுகளை சேகரிக்கும்
ஒரு பாதசாரியாக கடக்கிறது தினமும்..
ஒருஅதிகாலையில் தீர்ந்துபோன
சமையல் எரிவாயுக்காக காத்திருக்கும் சமயலறையாக
நிமிடங்கள் நகர பிடிவாதம் பிடிக்க
வாசல் நோக்க ஆரம்பிக்கலாம் யாதுமான நேசம் ....
தீராத காதலை தினம் தினம்
கோப்பையில் ஊற்றி பருகியபடி நகர்கிறது யாவும் ...
வார்த்தைகள் தீர்ந்த மௌனத்தில்
பேச ஆரம்பிக்கறது இந்த கவிதை முடிவாக ..
-நாகா

No comments:

neelam enbathu song