Thursday, July 26, 2018

12-10-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை :158 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


12-10-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை :158
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
எனக்கும் அந்த பறவைக்குமான உரையாடல்
எழுதி செல்கிறது இந்த கவிதையை ...
தானியங்களாக சிதறும் வார்த்தைகளை கொத்த ஆரம்பித்தது
நேற்று உங்கள் வாசல் வந்த அந்த பெயர் தெரியாத பறவை ...
என் மொழி உங்களுக்கு புரிந்திருந்தாலும்
அந்த பறவையின் மொழி உங்களுக்கு தெரிந்திருந்தாலும்
மொழிபெயர்க்காமல் கிடக்கலாம் அதன் மௌனம் ...
ஆகாயம் சுமந்து கண்டம் தாண்டும்
அதன் திசைகளின் விளிம்புகளில்
உதிர்ந்து கிடந்தது சிறகுகளாக அதன் தனிமை ...
கூட்டத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட
அதன் இருப்பிடத்தில் நேற்றைக்கும் நேற்று
கவிதைகளை சுமந்து கூன்விழுந்து
கிடந்தது அதன் இரவுகள் ...
ஒரு உரையாடல் முற்றுபெறாமல்
அந்த பறவையை போல எதையோ தேட ஆரம்பித்தது ..
ஒவ்வொரு முறையும் பறக்கும் போது
அது விட்டுத்தான் செல்கிறது
கண்ணீர் விட தெரியாத அதன் கவிதைகளை...
-நாகா

No comments:

neelam enbathu song