Monday, July 30, 2018

5-10-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை :154 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

5-10-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை :154
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
முதல் முறையாக
அப்போது தான் பார்க்கிறேன்
நிழல் பறவையை கொத்திக்கொண்டிருந்தது
அந்த நிஜ பறவை ...
தன்னைப்போல் அசைக்கும் அதன் சிறகை
பொறாமையாய் பார்த்தது ..
அந்த கண்ணாடி கடையை கடந்து போன
ஒரு இலையுதிர் கால மதியத்தில்
தன் பிம்பம் பார்த்து வேகமாய் பறந்தது அது..
கிளைகளில் அமர்ந்த போது
இரண்டொருமுறை குளத்தில் தன் உருவம் கண்டு
அது தானில்லை என்பதில் உண்டான நம்பிக்கை
அதன் ஆகாயத்தை காயப்படுத்தியது ....
மரம் கொத்தும் தன் அலகை
நிழல் கொத்த அனுமதித்தது அதன் விபரீதம்...
பறப்பது தான் அல்ல என்பதில்
காட்டும் அதன் அக்கறை
கவிதையுடன் அருகில் செல்லும் என்னை பார்த்து
பறக்க ஆரம்பித்தது நிதானமாக ..
இப்போது நிஜ பறவையை
கொத்த ஆரம்பித்தது நிழல் பறவை ...
- நாகா
Image may contain: bird

No comments:

neelam enbathu song