26 -12-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 203
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 203
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
மீரா நெடுநாளாக காத்திருக்கிறாள்
யமுனையின் கரையெங்கும்
ஒதுங்க ஆரம்பித்தன இசை சிப்பிகள்...
அவள் மீட்டும் தம்புராக்களில்
புல்லாங்குழலுடன் வந்து போகிறான் கண்ணன் ...
துயில் கலையும் மீராவின் காலைபொழுதுகள்
நீராடுகின்றன தாஜ்மகால் கனவில்...
திசையின் துணுக்குகளில்
தம்புரா மீட்டும் ஒரு கண்ணன்
புல்லாங்குழலுடன் ஒரு மீரா
பரஸ்பரம் சந்தித்துக்கொள்ளும் நேரத்தில்
மூழ்கி மறைகிறது காதல்
யாதுமாகும் யமுனையின் வெள்ளத்தில்....
ஒரு நிலா வெளிச்சத்தில்
தொலையாமல் தொலைகிறது யமுனை ..
யமுனையின் கரையெங்கும்
ஒதுங்க ஆரம்பித்தன இசை சிப்பிகள்...
அவள் மீட்டும் தம்புராக்களில்
புல்லாங்குழலுடன் வந்து போகிறான் கண்ணன் ...
துயில் கலையும் மீராவின் காலைபொழுதுகள்
நீராடுகின்றன தாஜ்மகால் கனவில்...
திசையின் துணுக்குகளில்
தம்புரா மீட்டும் ஒரு கண்ணன்
புல்லாங்குழலுடன் ஒரு மீரா
பரஸ்பரம் சந்தித்துக்கொள்ளும் நேரத்தில்
மூழ்கி மறைகிறது காதல்
யாதுமாகும் யமுனையின் வெள்ளத்தில்....
ஒரு நிலா வெளிச்சத்தில்
தொலையாமல் தொலைகிறது யமுனை ..
- நாகா
No comments:
Post a Comment