Thursday, July 26, 2018

14-12-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 196 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

14-12-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 196
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
சொற்களின் வாசனையில்
கரைகிறது இந்த தனிமை ...
இருட்டின் வாசனை நுகரும்
சுடரின் அசைவில் அது ஒளிர்கிறது
ஒரு பூனையின் கண்களை போல...
கனவின் வாசனை தேடும்
அதன் இமைகளின் தங்கிவிடும்
ஏக்கத்தின் விழுதுகளில் கூடுகட்டுகிறது ..
கடல்வாசனையில் எழும் அலை
வாரிசுருட்டி செல்கிறது சிறுபடகாக....
உள்ளங்கையில் முகம் புதைத்து போனவளை
கொலுசின் வாசனையில்
சிறைப்பிடிக்கும் கவிதையை போல
பின்தொடர்கிறது எப்போதும் ...
நிழல் வாசனையில் வெளிப்படும்
பிம்பத்தில் பிரதிப்பளிக்கும்
கண்ணாடியின் வாசனையில்
வழுக்கி விழுகிறது என்னை போல் எப்போதும்....
- நாகா

No comments:

neelam enbathu song