Thursday, July 26, 2018

05-11-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை :171 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


05-11-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை :171
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
மனிதர்களை கடந்து
விரைந்து கொண்டிருக்கிறது சாலைகள் ...
தெருவிளக்குகள் உதிர்த்த
வெளிச்ச பூக்களை சுற்றி கூடுகட்டுகிறது
ஒரு தேசாந்திரியின் மின்மினி இரவு ...
இலக்கில்லா அதன் பயணத்தில்
தொடர்ந்து வரும் நதியாகிறது கனவு ..
கதவில்லாத வீடுகளாக சாலைகளை
பார்க்க தொடங்கும் அதன் கைகளில் இருந்து
நழுவ ஆரம்பிக்கிறது சாவி......
நெடுஞ்சாலை உடம்பை உதறி தள்ளி
எழத்தொடங்கும் விழிப்பில் தளும்புகிறது ஆசை..
இருட்டை போர்த்தும் திசையில்
தொலைகிறது ஆடாக சாலைகள் ...
சாலைகளின் நீளம் தீர்மானிக்கும் பயணங்களில்
இளைப்பாறும் வழிப்போக்கனின் நிழல்
கிடைத்தேடி அலைகிறது ..
வழக்கம் போல வலசை திரும்பும்
பறவையின் ஒரு பக்க சிறகாக
இந்த கவிதை மாறிப்போகுமானால்
உங்கள் ஆகாயத்தை அலமாரியில்
நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம் ...
- நாகா

No comments:

neelam enbathu song