14-11-2017
செவ்வாய்
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 176
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
திருவிழாவில் தொலைத்த பொம்மைத்தேடும்
ஒருத்தியை நேற்று சந்திக்க நேர்ந்தது ...
அவளிடம் நிறைய பொம்மைகள் இருந்தன
கையில்லாமலும் காலில்லாமலும்
சில தலையில்லாமலும் கிடந்தது ...
குழந்தைகளுடன் குழந்தையான
அவளின் புகைப்படத்தில் அவளை தவிர
எல்லோரும் வெளியேறி விட்டிருந்தனர்..
பழுப்பேறிய புகைப்படத்தில்
பொம்மைகளுடன் தனித்து விடப்பட்டிருந்தாள் அவள்...
பொம்மைகளுடன் திரியும் அவளை
ஒரு பொம்மையாகவே பார்த்தது
என்னை போல் அந்த சாலை ...
உடைந்த பொம்மைகளை கண்டெடுக்கிறாள்
உடையாத தன் பொம்மை தேடும் ஆவலில் ..
ஒரு குழந்தையாகிய அவளின் அவசரம்
கடந்து போக வைக்கிறது எல்லோரையும் ...
தொலைத்தவளின் வலியை
கண்டெடுத்தவர்களிடம்
காணமுடிவதில்லை ஒருபோதும் ..
ஒருத்தியை நேற்று சந்திக்க நேர்ந்தது ...
அவளிடம் நிறைய பொம்மைகள் இருந்தன
கையில்லாமலும் காலில்லாமலும்
சில தலையில்லாமலும் கிடந்தது ...
குழந்தைகளுடன் குழந்தையான
அவளின் புகைப்படத்தில் அவளை தவிர
எல்லோரும் வெளியேறி விட்டிருந்தனர்..
பழுப்பேறிய புகைப்படத்தில்
பொம்மைகளுடன் தனித்து விடப்பட்டிருந்தாள் அவள்...
பொம்மைகளுடன் திரியும் அவளை
ஒரு பொம்மையாகவே பார்த்தது
என்னை போல் அந்த சாலை ...
உடைந்த பொம்மைகளை கண்டெடுக்கிறாள்
உடையாத தன் பொம்மை தேடும் ஆவலில் ..
ஒரு குழந்தையாகிய அவளின் அவசரம்
கடந்து போக வைக்கிறது எல்லோரையும் ...
தொலைத்தவளின் வலியை
கண்டெடுத்தவர்களிடம்
காணமுடிவதில்லை ஒருபோதும் ..
-நாகா
No comments:
Post a Comment