05-12-2017
செவ்வாய்
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 190
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு நதி குடிக்கும் கடலை
நேற்று சந்தித்தேன் ...
அதன் கரையெங்கும் ததும்பிய நுரையில்
மிதக்க ஆரம்பித்தது படகு....
அலைகள் வீசிய தூண்டிலில்
சிக்கிக்கொண்டது ஆகாயம் நீந்திய மீன்கள்...
கடல் பார்த்தல் நிகழ்ந்த தருணம்
சுவடுகள் மறந்து ஓடத்தொடங்கியது நண்டுகள்...
மணல் வீடுகளை துளைத்து கொண்டு
பறக்க ஆரம்பித்தது மின்மினிகள்...
கால் தொட்டு திரும்பும்
ஈரத்தின் மொழியில் எழுத தொடங்குகிறேன் ....
அந்த கடற்கரையில் நீ என்னை
தனியாக விட்டு வந்திருக்க கூடாது
நீ என்ற நினைப்பில் என்னையே
வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தது அந்த கடல் ...
நேற்று சந்தித்தேன் ...
அதன் கரையெங்கும் ததும்பிய நுரையில்
மிதக்க ஆரம்பித்தது படகு....
அலைகள் வீசிய தூண்டிலில்
சிக்கிக்கொண்டது ஆகாயம் நீந்திய மீன்கள்...
கடல் பார்த்தல் நிகழ்ந்த தருணம்
சுவடுகள் மறந்து ஓடத்தொடங்கியது நண்டுகள்...
மணல் வீடுகளை துளைத்து கொண்டு
பறக்க ஆரம்பித்தது மின்மினிகள்...
கால் தொட்டு திரும்பும்
ஈரத்தின் மொழியில் எழுத தொடங்குகிறேன் ....
அந்த கடற்கரையில் நீ என்னை
தனியாக விட்டு வந்திருக்க கூடாது
நீ என்ற நினைப்பில் என்னையே
வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தது அந்த கடல் ...
-நாகா
No comments:
Post a Comment