Thursday, July 26, 2018

26-10-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை :166 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

26-10-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை :166
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு பறவை அமர்ந்து போன கிளை போல
காற்றில் மெல்ல அசைகிறது இந்த கவிதை ...
தரைதொட்ட பூவில் மிதக்க ஆரம்பித்தது
காற்றின் கதவு திறக்கும் அதன் முயற்சி ...
உதிரும் நிழல் போல் மரம் சுற்றி அலைந்தது
வேர்களை விசாரிக்கும் அதன் நேசம் ....
ஒரு பெருமழைக்கு பிந்தைய மதியம்
முறிந்த கிளையில் தொங்கிய கூடு தேடி
பறந்தது அந்த பறவை யாருக்காகவோ ..
அசையும் இலைகளில் கொட்டிச்செல்லும்
அதன் தீராத இசையில் திசைகள் நனைய ஆரம்பித்தது ...
தலை துவட்டிப்போன தட்டான்களாக
தாழப்பறக்கும் அதன் சிறகு பிடிக்கும் உங்கள் முயற்சியில்
சிக்கிக் கொள்ளலாம் தட்டானுக்கு பதில் இந்த கவிதை ....
-நாகா

No comments:

neelam enbathu song