07-11-2017
செவ்வாய்
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை :172
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
கொஞ்சம் நிழலும் கூடுதல் வெயிலுமாக
இந்த பொழுது உன்னை போல் எனக்கும் ...
போர்வை போர்த்தும் இரவை
மழை கண்களுடன் பருக ஆரம்பித்தது...
கார் கண்ணாடியில் யாரோ எழுதிய
ஒருத்தியின் பெயரை ஞாபகப்படுத்தியது
இன்னொருத்தியின் முகம் ...
பின்னங்கழுத்தில் படரும் மூச்சு காற்றில்
நீந்த ஆரம்பித்தது ஞாபக மீன்கள்...
நீர் இறைக்கும் ராட்டினத்தில்
ஏறி இறங்கும் வாளியாக
கொட்டி நிரப்புகிறது ஒவ்வொருமுறையும் ..
பாசிபடர்ந்த குளத்தில் தளும்பும்
தாமரை இலைகளை தழுவிச்செல்கிறது காற்று ...
மூங்கிலை இசைக்க ஆரம்பிக்கும்
வனத்தில் இருந்து முதன் முறையாக கேட்கிறேன்
என் பெயரை உனது உதடுகளில் இருந்து ...
இந்த பொழுது உன்னை போல் எனக்கும் ...
போர்வை போர்த்தும் இரவை
மழை கண்களுடன் பருக ஆரம்பித்தது...
கார் கண்ணாடியில் யாரோ எழுதிய
ஒருத்தியின் பெயரை ஞாபகப்படுத்தியது
இன்னொருத்தியின் முகம் ...
பின்னங்கழுத்தில் படரும் மூச்சு காற்றில்
நீந்த ஆரம்பித்தது ஞாபக மீன்கள்...
நீர் இறைக்கும் ராட்டினத்தில்
ஏறி இறங்கும் வாளியாக
கொட்டி நிரப்புகிறது ஒவ்வொருமுறையும் ..
பாசிபடர்ந்த குளத்தில் தளும்பும்
தாமரை இலைகளை தழுவிச்செல்கிறது காற்று ...
மூங்கிலை இசைக்க ஆரம்பிக்கும்
வனத்தில் இருந்து முதன் முறையாக கேட்கிறேன்
என் பெயரை உனது உதடுகளில் இருந்து ...
- நாகா
No comments:
Post a Comment