Monday, July 30, 2018

28-09-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை :149 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....

28-09-2017
வியாழன் 

ஒற்றையடிப்பாதை :149

தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....

ஒரு மழை ஏந்துகிறது
இன்னொரு மழையை ...
காகித கப்பலில் மிதக்க ஆரம்பிக்கிறது
கரைத் தேடும் வார்த்தைகள் ..
கிளைகளின் இலைகளில்
இறங்கிக்கொண்டிருந்தன மேகம் ...
மீன்களை தேடி வீசப்படும் தூண்டில்
குளங்களை தூக்கி போகிறது ஒய்யாரமாக ..
ஆகாயம் நனைத்த வீதியில்
குளிர் போர்வைக்குள் விண்மீன்கள்...
தூறலில் காதலும் சாரலில் ஊடலுமாக
பயணிக்கும் வழிப்போக்கனாகிறது நிலா...
உதடுகள் தொட்டு உதடுகளில் கரையும்
கிளிஞ்சல்களாகிறது சிப்பி ...
ஈரத்தின் நிழலில் கூந்தல் உலர்த்தும்
நடைவண்டி நினைவில்
தேநீர் பருகுகிறது ப்ரியமானவளின் ஞாபகம் ..
குடைக் கம்பியில் குதித்தாடுகிறது
சிலிர்ப்புடன் இந்த கவிதை
ஏதோ ஒன்றை அர்த்தப்படுத்திய திருப்தியில் ....

- நாகா

Image may contain: nature, outdoor and water

No comments:

neelam enbathu song