Monday, July 30, 2018

03-10-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை :152 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

03-10-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை :152
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அந்த சாவியை கடந்து தான்
எல்லோரும் போனார்கள் என்னை தவிர...
யாரோ தவறவிட்டிருந்த அது
பூட்டிய வீட்டை ஞாபகப்படுத்தியது ...
அறைக்குள்ளிருந்து வெளியேற துடிக்கும்
சிலந்தியாய் கிடந்து தவித்தது அது..
கதவிடுக்கில் மாட்டிக்கொண்ட
யாரோ எழுதிய கடிதமோ
வாலறுந்து தொங்கிக்கொண்டிருக்கும் பல்லியோ
இறந்து கிடக்கும் கரப்பானை
இழுத்துச்செல்லும் எறும்புகளோ
ஏதோ நிகழ்ந்து கொண்டிருக்கலாம் அந்த அறைக்குள் ...
சாவியை கண்டுகொள்ளாத
பிறருடைய பிரியர்களின் மிச்சத்தில்
கூடுகட்ட ஆரம்பித்தது அதன் ஏக்கம்...
கள்ளசாவிகளை அனுமதிக்கும் பூட்டுகள்
எப்போதாவது தொலைத்துவிடுகிறது
இப்படிப்பட்ட சாவிகளை ...
சாவியை தொலைத்த யாரோ ஒருவன்
விட்டுச்சென்ற பரிதவிப்பை
சுமந்து நடக்கிறது இந்த கவிதை ...
- நாகா
No automatic alt text available.

No comments:

neelam enbathu song