Thursday, July 26, 2018

22-10-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை :162 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


22-10-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை :162
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அவளை பிடிக்காத அவனும்
அவனை புறந்தள்ளும் அவளும்
தேட ஆரம்பிக்கின்றனர் காரணங்களை
பிடித்தும் பிடிக்காமலும்.....
வண்ண நூல்களால் தொங்கிக்கொண்டிருக்கும்
வீதியை கடப்பதில் மட்டும் அலாதி பிரியம்
தொற்றிக்கொள்கிறது இயல்பாக ...
தறிச்சத்தம் இசைக்க ஆரம்பிக்க
உற்று கவனிக்கும் விழிகளை புறந்தள்ளியது நிறமுரண் ...
புரியாமல் இருந்த சொல்
பிறகுதான் புரிகிறது கயிறு திரிதலின் சூட்சுமம் ...
உள்ளங்கை தொட்டு மணிக்கட்டில்
வண்ண நூல்களை கட்டிப்போனவள்
இப்போதும் பௌர்ணமியாகவே தெரிகிறாள் ...
தேர்வு அறைகளை போல சில நேரமும்
விடைத்தாள்களை போல பல நேரமும்
நூல்களின் இணைப்பில் மூச்சுவாங்கியது மனசு...
சுட்டுவிரல்களில் சிக்கிய நூலில்
சுற்ற ஆரம்பிக்கும் சக்கரங்களாக
சுழல ஆரம்பிக்கிறது வாழ்க்கை.....
ஒற்றை நூலில் ஆட ஆரம்பிக்கும்
பொம்மைகளாக அவனும் அவளும் ...
யாரோ இறுக்கமாக போட்ட முடிச்சில் இருந்து
கட்டறுத்து வெளியேறுகிறது நூலின் சுவாசம் ..
-நாகா

No comments:

neelam enbathu song