Monday, July 30, 2018

04-10-2017 புதன் ஒற்றையடிப்பாதை :153 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

04-10-2017
புதன்
ஒற்றையடிப்பாதை :153
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
காற்றில் கரைதொட்டு மிதக்கும் குடைகளைப்போல
அவனுடன் நடந்துசென்ற மழை ராத்திரியை
யோசித்து கொண்டிருக்கிறாள் அவள்....
மழை நனைத்த அவளை பிம்பமாய்
வரைய ஆரம்பிக்கிறான் அவன்
கிறுக்கலில் உடைந்த பென்சிலை போல்
ஈரம் சொட்டும் இரவுகளில்
ஒரு தேசாந்திரியை ஞாபகப்படுத்தியபடி....
மின்மினி பூச்சியை உள்ளங்கையில் பொத்தியபடி
குளிர் போர்வைக்குள் உறங்க தொடங்கினர்
அவர்களை அப்படி யோசிக்க வைத்தவர்கள் ....
சாலையெங்கும் உடன் வந்த வார்த்தைகள்
கதவு தட்டிக்கொண்டிருக்க யாரையோ
தேடிக் கொண்டிருந்தது அந்த காதல் ஒரு பாதசாரியை போல் ...
விடைபெற்று வந்த பிறகுதான் தெரிந்தது
அழைப்பிதழுக்கு வெளியே அவனும்
அழைக்காமல் மனதின் உள்ளே அவளும் இருப்பது ....
ஒரு முறிந்த மரக்கிளையில்
மெல்ல பெய்துகொண்டிருந்தது
இரண்டு மழை ஒரு கூடைக்கு வெளியே ...
மழையேந்தும் மழைக்குள்
மழலையான காதலின் நடைவண்டி
உடைந்து போயிருந்தது அப்போது ...
மழையில் இணைந்த காதல் மழையில் பிரிவதை
கவிதையாய் பார்க்கிறேன் நான்
அய்யோ பாவம் என்று நீங்கள் கண்ணீர் விடுகிறீர்கள்
அதையும் துடைத்து எடுத்துச்செல்லும் இந்தபெருமழை ..
- நாகா
Image may contain: outdoor

No comments:

neelam enbathu song