08-10-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை :155
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை :155
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு பெருமழையில் நனையாமல் நடக்கும்
என்னை நனைத்து பார்க்கிறது அவளின் பிரியம் ...
உதிரும் நீர்திவலைகளில் உருண்டோடுகிறது
அவளுக்கும் எனக்குமான உரையாடல்கள்...
கூந்தலில் சிக்கிய என் விரல்களில் இருந்து
செல்லமாய் பதுங்கி ஓடின காதல் முயல்கள்....
உயர உயர பறந்துசெல்லும் ஒரு பறவையாக
என் ஆகாயம் எங்கும் நீந்துகிறது அவளின் நேசம் ...
கன்னத்தில் பின்னங்கழுத்தில் நெற்றியில்
உதட்டில் உள்ளகையில் படர்கின்றன முத்தங்கள் ....
வேலிகளை தாண்டும் மரத்தின் நிழல் போல
உள்ளிறங்கும் வேர்களில்
கிளைவிரிக்கிறது எங்கள் தனிமை ...
பனித்துளி வார்த்தையில் பசியாறும்
எங்கள் ஊடல்களில் குளிர் காய்ந்த காதல்
முதல் முறையாக உறங்க செல்கிறது
எங்களை எழுப்பி விட்ட நிம்மதியில்....
என்னை நனைத்து பார்க்கிறது அவளின் பிரியம் ...
உதிரும் நீர்திவலைகளில் உருண்டோடுகிறது
அவளுக்கும் எனக்குமான உரையாடல்கள்...
கூந்தலில் சிக்கிய என் விரல்களில் இருந்து
செல்லமாய் பதுங்கி ஓடின காதல் முயல்கள்....
உயர உயர பறந்துசெல்லும் ஒரு பறவையாக
என் ஆகாயம் எங்கும் நீந்துகிறது அவளின் நேசம் ...
கன்னத்தில் பின்னங்கழுத்தில் நெற்றியில்
உதட்டில் உள்ளகையில் படர்கின்றன முத்தங்கள் ....
வேலிகளை தாண்டும் மரத்தின் நிழல் போல
உள்ளிறங்கும் வேர்களில்
கிளைவிரிக்கிறது எங்கள் தனிமை ...
பனித்துளி வார்த்தையில் பசியாறும்
எங்கள் ஊடல்களில் குளிர் காய்ந்த காதல்
முதல் முறையாக உறங்க செல்கிறது
எங்களை எழுப்பி விட்ட நிம்மதியில்....
- நாகா

No comments:
Post a Comment