Thursday, July 26, 2018

15-11-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 177 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

15-11-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 177
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
நிபந்தனையற்ற காதலாகிறது
அவளுக்கும் அவனுக்குமான நேசம்...
தேநீர் கோப்பையின் கைப்பிடியில்
பிடிநழுவா ஆயுள்ரேகையாய் அவனும்
விளிம்புகளில் பதியும் உதட்டின் ரேகையாய் அவளும்
இட்டுக்கொள்கின்றனர் முத்தங்களை சத்தமில்லாமல் ...
முல்லையை கடந்த ஒரு சிநேகம்
நெய்தலுக்குள் அவர்களை மிதக்க விட்டது ...
கரையொதுங்கும் பரிசலில்
கிளிஞ்சல்கள் பூக்க ஆரம்பித்தது..
பாசாங்குகளை வெளிப்படுத்தாத
சுவடு பதிந்த கடற்கரையெங்கும்
நண்டுகளாக மேய ஆரம்பித்தது மோகம் ...
கடந்து போன அலையின் பின்னே ஒரு குழந்தையாக
ஓட ஆரம்பிக்கும் காதலை ஒரு பார்வையாளனாய்
பார்க்க ஆரம்பிக்கறது காலம்...
அவனை காதலால் அணைக்கிறாள் அவள்
அவளை அன்பால் நனைக்கிறான் அவன் ...
பிடிவாதம் பிடிக்கும் பொழுதில்
பிடி நழுவ ஆரம்பிக்கிறது இந்த கவிதை ...
-நாகா

No comments:

neelam enbathu song