Thursday, July 26, 2018

11-10-2017 புதன் ஒற்றையடிப்பாதை :157 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

11-10-2017
புதன்
ஒற்றையடிப்பாதை :157
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு சுற்றும் பம்பரமும்
சுற்றிவிட்ட சாட்டையுமாக
தென்படலாம் இந்த கவிதை.....
ஆனால் பம்பரம் பற்றியும் சாட்டை குறித்தும்
பேசப்போவதில்லை இது ..
சாட்டையின் லாவகம் தீர்மானிக்கும்
பம்பரத்தின் ஆயுளை
வேக வேகமாக சொல்லி செல்கிறது அவ்வளவுதான் ...
ஆணிகள் உராய்ந்து தேய்ந்த நிலம்
அசைக்கிறது ஒவ்வொரு முறையும் ..
சாட்டை தொலைத்த பம்பரம்
சுழல ஆரம்பித்தது கவிதையில் ...
உள்ளங்கையில் சுழலும் பம்பரம்
ஒரு பார்வையாளனாகவே
பார்க்க வைக்கிறது அனைத்தையும் ...
சுற்றும் பம்பரங்களும் சுற்றாத சாட்டைகளும்
சொல்லிக் கொள்கின்றன
சுற்றிவிட்டவனின் தீராத ஆசையை ..
அந்த சாத்தியமில்லாத பொழுதில்
சங்கடப்படுத்தவே செய்கின்றன சாட்டைகள்...
சாட்டையில் இருந்து அவசரமாக
கண்விழித்தது அந்த எறும்பு
சுழலும் பம்பரத்தின் சுற்றுப்புறங்களில் ஊர்ந்தபடி .....
-நாகா

No comments:

neelam enbathu song