Thursday, July 26, 2018

17-10-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை :160 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

17-10-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை :160
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
பெயர் சொல்ல வெட்கப்பட்ட
ஒரு பெண்குழந்தையை நேற்று அங்காடியில் சந்தித்தேன்
அப்பாவுடன் தக்காளி பொறுக்கிக்கொண்டிருந்தாள்....
கேள்வியை மிரட்சியுடன் எதிர்கொண்ட அவளுக்கு
அப்பாவின் கைவிரல் அப்போதைக்கு பாதுகாப்பு...
சாலையை கடந்த போது அம்மாவின்
விரல் பிடித்து போன இன்னொரு பெண்குழந்தையிடம்
கேட்ட அதேகேள்விக்கு மறுப்பு மட்டுமே பதிலாய் வந்தது
கரைந்து வழிந்து உருகிக்கொண்டிருந்தது ஐஸ் க்ரீம் ...
அம்மாவும் அப்பாவும் உடன் வந்த தம்பியுமாய்
பின்னொருநாள் திரையரங்கில்
அதே கேள்விக்கு தன் வெள்ளைநிற டெட்டி பியருக்கு
வைத்த செல்ல பெயர்வரை பகிர்ந்து கொண்டாள்
பாப்கார்ன் கனவுகளை பங்கிட்டுக்கொண்டது...
இன்னொரு பெண் குழந்தை ....
கேள்விகளை நான் கேட்ட இடமும்
அதை எதிர்கொண்ட குழந்தைகளுமாக
இந்த கவிதை நிரம்பிக் கொண்டிருக்க
ஏதும் அறியாத ஒரு பெண்குழந்தை
என்னை விசாரிக்க ஆரம்பிக்க
முடிந்துவிடுகிறது இந்த கவிதை பலவீனத்துடன் ....
-நாகா

No comments:

neelam enbathu song