Thursday, July 26, 2018

24-10-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை :164 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


24-10-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை :164
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
யாரோ எறிந்த கல்
குளத்தின் மேலே மிதக்கிறது வளையங்களாக ..
ஒவ்வொரு வளையத்திற்குள்ளும்
மூழ்கி எழுகிறது ஒரு பட்டாம்பூச்சி ...
நதியில் துள்ளிக்குதித்த மீனின்
அதிர்வில் குலுங்கி அடங்கிய
அதன் கரையெங்கும் ஒதுங்கியது சிப்பிகள்...
தேநீர் கோப்பையில் கரைந்த சர்க்கரையை
பிரித்தெடுக்கும் உதடுகளில்
தொட்டு போகிறது அந்த ஒற்றை மழைத்துளி ...
குழம்பிய நிறக்கலவையில்
தனித்து தெரிய ஆரம்பித்த ஓவியம்
மேலிருந்து கீழாக இடமிருந்து வலமாக
சிதறிய வார்த்தைகளில் எழுத ஆரம்பித்தது ...
கொட்டிய தானியங்களை
குழப்பமில்லாமல் கொத்திச்செல்லும்
புறாவாகும் தருணங்களை
பறக்கவிடுகிறது இந்த கவிதை....
நீங்கள் வாசித்து முடிக்கும் போது
அந்த வெற்றிடத்தை நிரப்பி இருக்கும்
பறவை உதிர்த்த அந்த ஒற்றை இறகு ....
-நாகா

No comments:

neelam enbathu song