Thursday, July 26, 2018

31-10-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை :169 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


31-10-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை :169
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
வழிதெரியாமல் மாட்டிக்கொண்ட
ஒரு வழிப்போக்கனை போல
அந்த இரவு நேர பேருந்தில் சிக்கிக்கொண்டது
சாயம்போகாத அந்த வண்ணத்துப்பூச்சி ....
தேநீர் இடைவேளையில் இறங்கிய கூட்டத்திற்கிடையில்
உடன் வந்து உள் நுழைந்திருக்கவேண்டும் ...
இரவின் இருள் போர்த்திய சாலையில்
ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தில்
சதா அலைந்து கொண்டிருந்தது அது ...
தோட்டத்தின் முகவரி தொலைந்திருந்ததை
படபடக்கும் அதன் இறக்கைகள் சொல்லிக் கொண்டது ...
களைத்து ஒரு கட்டத்தில் ஜன்னல் வழி வெளியேறி
மீண்டும் உள் நுழைந்துவிட்டது அது....
அதன் விடுதலை உள் இல்லை என்பதை
உணர முற்பட்டிருக்கும் பொழுதில்
அமர ஆரம்பித்தது குடைக்கம்பிகளுக்கு மேல் ..
வண்ணத்து பூச்சியின் மொழி தெரிந்திருந்தால்
ஒருவேளை விசாரித்து இருக்கலாம் ...
மின்மினி இரவுகளை ரசிக்க ஆரம்பிக்கும்
என் கண்களில் விழுந்தது அதன் தனிமையின் நிழல் ..
உடன் அழைத்து போகும் என் எண்ணதில்
நள்ளிரவில் இறங்கிய என்னுடன்
இறங்கிய அதன் துணிச்சல்
அந்த நீல இரவை வெண்ணிற இரவாக்கியது ...
அனேகமாக என் வீட்டிற்கு பின்னே
ஒரு தோட்டம் உருவாகலாம் ....
-நாகா

No comments:

neelam enbathu song