23-11-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 182
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 182
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அவள் தீயின் நிழலாக
நான் நெருப்பின் மழையாக
ஒரு ஜுவாலை கனன்று முடிகிறது மெதுவாக ...
எறிந்த சாம்பல் கிளறிப்பார்க்கிறேன்
ஒரு புல்லாங்குழலின் மிச்சமான இசை
தட்டுப்படுகிறது உள்ளங்கைகளில் ..
அதரங்களில் வெளிப்படும் குத்தீட்டிகளில்
சிக்கிக்கொள்கின்றன முத்தங்கள்...
காயப்படாத காமத்தின் துண்டொன்று
யாக்கை கடந்து யுகங்களை தாக்க செல்கிறது ...
ஒருபாலைவன பயணியின் அதீத தேடலாய்
திசைகளில் வாரித் தெளிக்கிறது தாகம் ...
கங்குகள் எங்கும் நந்தலாக்களை
நலம் விசாரிக்கிறது தீநாக்குகள் ...
எரியும் மெழுகென உடலும்
திரியென பூச்சூடும் கூடலுமான
நிமித்தங்களை நிறபேதப்படுத்துவதில்லை காதல்....
நான் நெருப்பின் மழையாக
ஒரு ஜுவாலை கனன்று முடிகிறது மெதுவாக ...
எறிந்த சாம்பல் கிளறிப்பார்க்கிறேன்
ஒரு புல்லாங்குழலின் மிச்சமான இசை
தட்டுப்படுகிறது உள்ளங்கைகளில் ..
அதரங்களில் வெளிப்படும் குத்தீட்டிகளில்
சிக்கிக்கொள்கின்றன முத்தங்கள்...
காயப்படாத காமத்தின் துண்டொன்று
யாக்கை கடந்து யுகங்களை தாக்க செல்கிறது ...
ஒருபாலைவன பயணியின் அதீத தேடலாய்
திசைகளில் வாரித் தெளிக்கிறது தாகம் ...
கங்குகள் எங்கும் நந்தலாக்களை
நலம் விசாரிக்கிறது தீநாக்குகள் ...
எரியும் மெழுகென உடலும்
திரியென பூச்சூடும் கூடலுமான
நிமித்தங்களை நிறபேதப்படுத்துவதில்லை காதல்....
- நாகா
No comments:
Post a Comment