21 -12-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 200
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 200
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு பூனையாக உருள்கிறது
அவளின் நினைவு ...
கை நழுவி விழும் பொருள்களை போல
சத்தமிட்டு அடங்குகிறது காதல்...
பதுங்கி பாயும் ஒரு புலியின் பாய்ச்சலை
கொட்டி செல்கிறது அவள் அன்பு ...
காமத்தின் வாசனை நுகரும்
ஒரு சாளர திறப்பில் திகைக்கிறது சாதுவாக ...
கதவு திறந்து மழை மேகத்தை
கொண்டுவரும் அதன் பின்னணியில்
கைகோர்த்து கொள்கிறது யாவும் ...
" மியாவ் " ஆகிற நிமிடங்கள்
மிடறு மிடராக உள்ளிறங்கும்
சர்ப்பம் விழுங்கும் பனித்துண்டங்களாகிறது
அவளுடன் கரைகிற தருணம் ...
மெல்ல பதுங்கி பின் குதிக்க எத்தனிக்கும்
பூனைக்கும் அவளுக்கும் பெரிய வித்தியாசமில்லை ..
யாமத்தில் சொப்பனம் கவ்வி போகிறது அந்த பூனை
என்னை தன் செல்ல எலியாக பாவித்தபடி ....
அவளின் நினைவு ...
கை நழுவி விழும் பொருள்களை போல
சத்தமிட்டு அடங்குகிறது காதல்...
பதுங்கி பாயும் ஒரு புலியின் பாய்ச்சலை
கொட்டி செல்கிறது அவள் அன்பு ...
காமத்தின் வாசனை நுகரும்
ஒரு சாளர திறப்பில் திகைக்கிறது சாதுவாக ...
கதவு திறந்து மழை மேகத்தை
கொண்டுவரும் அதன் பின்னணியில்
கைகோர்த்து கொள்கிறது யாவும் ...
" மியாவ் " ஆகிற நிமிடங்கள்
மிடறு மிடராக உள்ளிறங்கும்
சர்ப்பம் விழுங்கும் பனித்துண்டங்களாகிறது
அவளுடன் கரைகிற தருணம் ...
மெல்ல பதுங்கி பின் குதிக்க எத்தனிக்கும்
பூனைக்கும் அவளுக்கும் பெரிய வித்தியாசமில்லை ..
யாமத்தில் சொப்பனம் கவ்வி போகிறது அந்த பூனை
என்னை தன் செல்ல எலியாக பாவித்தபடி ....
- நாகா
No comments:
Post a Comment