RJ Naga
21-09-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை :144
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
வியாழன்
ஒற்றையடிப்பாதை :144
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
எதையும் கதையுடன் முடிச்சுப்போடும்
ஒரு கதாசிரியனின் மதியநேரத்தை போல
தாமதமாய் தொடங்குகிறது வாழ்க்கை ..
பாத்திரங்களின் உரையாடலை
எழுதிமுடித்த அசதியில் முற்றுபெறாமல்
காத்திருக்கிறது அந்த பிரதி .....
படபடக்கும் காற்றில் கதைக்கான கருவிற்காக
கவிதையாகி கொண்டிருந்தான் அவன் ...
பரண்களில் ஏறி பூனைகளாய் பதுங்கிய வார்த்தைகளுக்கு
பாலூட்டிக் கொண்டிருந்தான் கவிஞன் ஒருவன் ..
கவிதையாகவே பார்க்கும் அவன் பார்வையில்
ஒரு கதையாக கரைந்துக் கொண்டிருந்தது அது ...
கதாசிரியனும் கவிஞனும் குடித்து
மிச்சம் வைத்த தேநீர் கோப்பையில்
செத்துக்கிடந்தது சில கவிதையும் சில கதைகளும்...
தூரத்தில் தூரிகையுடன் தீட்டிக் கொண்டிருந்தான்
இவர்களை ஓவியன் ஒருவன் ...
அவன் வண்ணங்களில் கண்சிமிட்டிகொண்டிருந்தது
அதே வாழ்க்கை கொஞ்சம் கதையாகவும்
கொஞ்சம் கவிதையாகவும் எப்போதும் ஓவியமாகவும் .....
ஒரு கதாசிரியனின் மதியநேரத்தை போல
தாமதமாய் தொடங்குகிறது வாழ்க்கை ..
பாத்திரங்களின் உரையாடலை
எழுதிமுடித்த அசதியில் முற்றுபெறாமல்
காத்திருக்கிறது அந்த பிரதி .....
படபடக்கும் காற்றில் கதைக்கான கருவிற்காக
கவிதையாகி கொண்டிருந்தான் அவன் ...
பரண்களில் ஏறி பூனைகளாய் பதுங்கிய வார்த்தைகளுக்கு
பாலூட்டிக் கொண்டிருந்தான் கவிஞன் ஒருவன் ..
கவிதையாகவே பார்க்கும் அவன் பார்வையில்
ஒரு கதையாக கரைந்துக் கொண்டிருந்தது அது ...
கதாசிரியனும் கவிஞனும் குடித்து
மிச்சம் வைத்த தேநீர் கோப்பையில்
செத்துக்கிடந்தது சில கவிதையும் சில கதைகளும்...
தூரத்தில் தூரிகையுடன் தீட்டிக் கொண்டிருந்தான்
இவர்களை ஓவியன் ஒருவன் ...
அவன் வண்ணங்களில் கண்சிமிட்டிகொண்டிருந்தது
அதே வாழ்க்கை கொஞ்சம் கதையாகவும்
கொஞ்சம் கவிதையாகவும் எப்போதும் ஓவியமாகவும் .....
- நாகா
No comments:
Post a Comment