RJ Naga
24-09-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை :145
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை :145
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அந்த கட்டிடத்தை கடந்து தான்
செல்ல வேண்டி இருக்கும் ஒவ்வொருமுறையும் ...
ஆறாம் தளத்தில் இருந்த பிலிப்பினி பையனும்
ஏழாம் தளத்தில் வசித்த தென்னாபிரிக்கா பெண்ணும்
நான்காம் தளத்தில் குடியிருந்த பெங்காலி குடும்பமும்
இப்போது எங்கு போயிருப்பார்கள்
என் யோசிப்பின் கிளையில்
கூடுகட்ட தொடங்கியது அந்த நினைவு பறவை ...
கூடுகளுடன் பறந்து போய்விட்ட
பறவைகளை தேடும் ஒரு மரமாகவே
அந்த கட்டிடம் மாறிக் கொண்டிருந்ததில்
எனக்கு பெரிய ஆச்சர்யம் ...
அதை கட்ட தொடங்கிய போது வேலைக்கு வந்த
அந்த வட நாட்டுக்காரனுக்கு
இடிக்கும் போதும் பணிகிடைத்ததில்
ஒருவேளை வருத்தம் இருந்திருக்கலாம் ...
கட்டிடங்களை அஃறிணைகளாக பார்க்க முடியவில்லை
சுவாசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து
வெளியேறவே செய்கின்றன ஒவ்வொருமுறையும் மனிதம் ...
கம்பிகளும் உடைந்த ஜன்னல்களும்
சிதிலங்களுக்கு மத்தியில் முளைக்க ஆரம்பிக்கும்
செடிக்கு பக்கத்தில் இருந்து
எட்டிப்பார்க்கும் இந்த மாதிரி சில கவிதையும்
எழுதவே செய்கின்றன வாழ்க்கையை ...
செல்ல வேண்டி இருக்கும் ஒவ்வொருமுறையும் ...
ஆறாம் தளத்தில் இருந்த பிலிப்பினி பையனும்
ஏழாம் தளத்தில் வசித்த தென்னாபிரிக்கா பெண்ணும்
நான்காம் தளத்தில் குடியிருந்த பெங்காலி குடும்பமும்
இப்போது எங்கு போயிருப்பார்கள்
என் யோசிப்பின் கிளையில்
கூடுகட்ட தொடங்கியது அந்த நினைவு பறவை ...
கூடுகளுடன் பறந்து போய்விட்ட
பறவைகளை தேடும் ஒரு மரமாகவே
அந்த கட்டிடம் மாறிக் கொண்டிருந்ததில்
எனக்கு பெரிய ஆச்சர்யம் ...
அதை கட்ட தொடங்கிய போது வேலைக்கு வந்த
அந்த வட நாட்டுக்காரனுக்கு
இடிக்கும் போதும் பணிகிடைத்ததில்
ஒருவேளை வருத்தம் இருந்திருக்கலாம் ...
கட்டிடங்களை அஃறிணைகளாக பார்க்க முடியவில்லை
சுவாசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து
வெளியேறவே செய்கின்றன ஒவ்வொருமுறையும் மனிதம் ...
கம்பிகளும் உடைந்த ஜன்னல்களும்
சிதிலங்களுக்கு மத்தியில் முளைக்க ஆரம்பிக்கும்
செடிக்கு பக்கத்தில் இருந்து
எட்டிப்பார்க்கும் இந்த மாதிரி சில கவிதையும்
எழுதவே செய்கின்றன வாழ்க்கையை ...
- நாகா
No comments:
Post a Comment