Monday, September 3, 2018

26-09-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை :147 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
26-09-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை :147
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு கலைடாஸ் கோப்பும்
பச்சை கலர் உடைந்த கண்ணாடி வளையலும்
இந்த கவிதையை காதலாக்கலாம்
சத்தியமாய் இது காதல் கவிதை இல்லை ....
அறிவியல் டீச்சர் சொல்லிக்கொடுத்தது
மறந்து போயிருந்தாலும்
பெட்ரோமாக்ஸ் கண்ணாடியில் இருந்து
எடுத்த மூன்று துண்டில்
விரல் பட்ட காயம் இன்னும் நினைவில்
காயம் ஆறியும் தழும்பு மாறாமல் ...
முக்கோணமாக வைத்து சுற்றி பார்க்க
கண்களில் தெரிந்தது உடைந்த வானவில் ....
கனகாம்பர செடிக்கருகில்
அவள் வலதுகை பிடித்த போது
உடைந்த வளையல் துண்டுகளில்
தெரிந்தது உடைந்த சில நம்பிக்கை
உதிர்ந்த சில புன்னகை ...
வளையல் காரியின் கனவுகளை
ஒவ்வொரு வடிவத்திற்குள்ளும்
கொண்டுவந்து சேர்த்தது கலைடாஸ் கோப்...
காட்சி பிழைகளில் கூடு கட்டியது
உடைந்த வளையல்களில் காதல் சிலந்தி.....
- நாகா

No comments:

neelam enbathu song